1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : வியாழன், 8 செப்டம்பர் 2016 (15:42 IST)

பெற்றோர்கள் மகளுக்கு திருமணம் செய்து கொடுப்பார்கள், ஆனால் இந்த தாய் என்ன செய்தார் தெரியுமா?

அமெரிக்கா நாட்டின் ஒலகோமா மாநிலத்தை சேர்ந்தவர் பாட்ரிகா ஸ்பேன் (43).


 


இவர், கடந்த மார்ச் மாதம் தனது மகள் மிஸ்டி ஸ்பேனை (25) சட்டரீதியாக திருமணம் செய்துள்ளார்.  இந்நிலையில் மனித சேவை துறையினர் வீடுகளில் நடத்திய குழந்தைகள் நல விசாரணையின் போது, இவர்களின் முறைகேடான திருமண உறவை கண்டுபிடித்துள்ளனர். இதை அடுத்து, தாய் மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தாய் பேட்ரிகா  கூறியதாவது, ”நான் எவ்வித சட்டத்தினையும் மீறவில்லை. எனது மகளின் பிறப்பு சான்றிதழில் எனது பெயர் இல்லாத காரணத்தால் இந்த திருமணம் பெரிய பிரச்சனையாக எனக்கு தெரியவரவில்லை.” என்றார்.  காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், 2008 ஆம் ஆண்டு, அவர் தனது மகனையும் திருமணம் செய்துக் கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.