1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : வியாழன், 10 ஜூலை 2014 (18:14 IST)

11 மாத குழந்தையை கொன்று புகைப்படத்தை பேஸ்புக்கில் அப்லோட் செய்த தாய்

அமெரிக்காவில் தாய் ஒருவர் அவரது 11 மாத ஆண் குழந்தையை கொலை செய்து, குழந்தையின் சடலத்தை புகைப்படமெடுத்து பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நியூயார்க்கை சேர்ந்த நிகோல் கெல்லி, அவரது 11 மாத ஆண் குழந்தையை கொலை செய்து, குழந்தையின் சடலத்தை புகைப்படமெடுத்து பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
 
குழந்தையின் சடலத்தின் புகைப்படத்திற்கு அருகே, எனது மகனை நான் இழந்துவிட்டேன். அவனை மீண்டும் என் வாழிவிற்குள் கொண்டுவர எதாவது வழி இருக்கவேண்டும் என தோன்றுகிறது. அவன் எனது மகன், நான் அவனை பாதுகாத்திருக்க வேண்டும். அவன் இறந்துவிட்டான் என்பது எனக்கு கவலையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினரிடம், என் மகன் எனக்கு வேண்டாம், அதனால் அவனை கொன்றேன் எனத் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குழந்தையை கொன்ற குற்றத்திற்காக நிகோலிற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.