வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 14 ஆகஸ்ட் 2015 (20:05 IST)

பாகிஸ்தான் அண்டை நாடுகளுடன் அமைதியான நல்லுறவையே விரும்புகிறது - மம்னூன் ஹுசைன்

இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான நல்லுறவையே விரும்புவதாக, அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹுசைன் கூறியுள்ளார்.
 
இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் சுதந்திர தின விழாவில் பங்கேற்று கொடியேற்றினார் மம்னூன் ஹுசைன்.
 
அப்போது அவர் பேசுகையில், பாகிஸ்தான், இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான நல்லுறவையே விரும்புகிறது. ஆனால், அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது அதனை முறியடிக்கவே தாக்குதல் நடத்தப்படுகிறது என்று கூறினார்.