வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 27 நவம்பர் 2014 (17:33 IST)

ஆண்மையை அதிகரிக்க மது குடிக்கும் வடகொரிய அதிபர்

வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங்-உன் தனது ஆண்மையையும், ஆயுளையும் அதிகரிக்க நல்ல பாம்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் மதுபானத்தை தினமும் குடித்து வருகிறார்.
 
மதுபான பிரியரான இவருக்கு தினமும் விசேஷமாக பாம்பு ஒயின் தயாரித்து அளிக்கப்படுகிறது.
 
31 வயதான கிம் ஜோங்-உன் பருமனாக இருப்பதால் அவருடைய மனைவி ரிஜோல்-சு தாய்மை அடைவதில் பிரச்சனை உள்ளதாகவும், இதனால்தான் கிம் ஜோங்-உன் நல்ல பாம்பு ஒயினை தொடர்ந்து அருந்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
வடகொரியாவில் குழந்தைப் பேறு இல்லாவிட்டால் ஆண்கள், ஆண்மை சக்தியை பெருக்கிக் கொள்ள பாம்பு ஒயின் அருந்துவது தொன்று தொட்ட பழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.