போதை பொருள் வழக்கில் ஜாக்கி சான் மகன் கைது
பிரபல நடிகரான ஜாக்கி சானின் மகன் ஜெய்சி சானை சட்டவிரோதமாக போதை பொருள் வைத்திருந்த வழக்கில் சீன போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் போதை பொருள் சார்ந்த குற்றங்கள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சீன அதிபர் க்ஸி ஜின்பிங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரபல நடிகரான ஜாக்கி சானின் மகன் ஜெய்சி சானையும், அவருடைய நண்பரான கய் கோவையும் சட்டவிரோதமாக போதை பொருள் வைத்திருந்ததாகவும், போதை பொருள் சார்ந்த குற்றங்களில் ஈடுபட்டதாகவும் சீன போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களை பரிசோதித்து பார்க்கையில் அவர்கள் இருவரும் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது எனவும், அவர்கள் மீது அளிக்கப்பட்ட புகார்கள் நிரூபிக்கப்பட்டால் ஜாக்கி சானின் மகனுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.