செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Updated : வியாழன், 20 அக்டோபர் 2016 (13:43 IST)

மாமனாருடன் உல்லாசம்: தடையாக இருந்த மகனை கொன்ற கொடூர தாய்!

மாமனாருடன் உல்லாசம்: தடையாக இருந்த மகனை கொன்ற கொடூர தாய்!

இத்தாலியின் சிசிலி பகுதியில் உள்ள ஒரு பெண் தனது 8 வயது மகனை பொட்டல் காட்டில் புதைத்து கொடூரமாக கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


 
 
வெரோனிக்கா என்னும் அந்த பெண் தனது மகனை கொன்றது குறித்து பேசும் போது, தனக்கும் தனது மாமனாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டதை தன்னுடைய மகன் லாரிஸ் பார்த்ததால் அவனை கொலை செய்ததாக கூறினார்.
 
ஆனால் அவரது மாமனார் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார். தனக்கும் தனது மருமகளுக்கும் இடையே அப்படி எந்த உறவும் இருக்கவில்லை. நான் ஒருபோதும் அப்படி நினைத்ததில்லை. எனது மருமகள் பொய் சொல்கிறார்.
 
எனக்கு எனது பேரனை ரொம்ப பிடிக்கும், தேவையில்லாமல் எனது மருமகள் என் மீது பழி சுமத்துகிறாள். எனவே உண்மையான காரணைத்தை அதிகாரிகள் விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
 
இதனை விசாரித்த நீதிமன்றம் வெரோனிக்காவின் குற்றத்தை உறுதி செய்தது. இதனையடுத்து அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.