இஸ்தான்புல் விமானநிலையத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல்: 36 பலி
இஸ்தான்புல் விமானநிலையத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியத்தில் 36 உயிரிழந்தனர்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் சர்வதேச விமானநிலையத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் அமைப்பைச் சேர்ந்த தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்தான்புல் சர்வதேச விமானநிலையத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த பயணிகளை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு அச்சத்தில் உறைந்த பயணிகள் அலறிக்கொண்டு ஓடினர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் அதிரடியாக பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்த முயற்சித்த போது மூன்று தற்கொலை தாரர்கள் குண்டு வெடிக்கச் செய்தலில் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். துருக்கியில் ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது விமானநிலையத்தில் நடந்த இந்த தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.