மதம் மாற மறுத்த சிறுவனின் விரல் நுனியை வெட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ்
மதம் மாற மறுத்த அவனது தந்தை மற்றும் ஏனைய கிறிஸ்தவர்கள் முன்பாக 12 வயது சிறுவன் ஒருவனது விரல் நுனிகளை, ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் வெட்டித் துண்டித்துள்ளனர்.
அந்தப் சிறுவனின் தந்தை கிறிஸ்தவ தொண்டு நிறுவன குழுவொன்றின் தலைவராக இருந்து வருகிறார். அவரும் மற்றவர்களும் மதம் மாறுவதற்கு மறுத்ததையடுத்து, அவரது மகன் சித்திரவதை செய்யப்படுவான் என ஐ.எஸ். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
அதற்கும் அவர் அடிபணியாததால் சினமடைந்த தீவிரவாதிகள், அந்த சிறுவனை அடித்து உதைத்து சித்திரவதை செய்து அவனது விரல் நுனிகளை வெட்டித் துண்டித்துள்ளனர்.
அத்துடன் அங்கிருந்த ஏனைய கிறிஸ்தவர்கள் இருவரையும் அடித்து உதைத்த தீவிரவாதிகள், அவர்களையும் குறிப்பிட்ட சிறுவனையும் சிலுவையில் அறைந்துள்ளனர்.