வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (11:27 IST)

ஐ.எஸ்.ஜ.எஸ் போராளிகளின் பிடியில் பிரிட்டன் பத்திரிகையாளர்: வீடியோ வெளியீடு

ஈராக் மற்றும் சிரியா உள்ளிட்ட பல பகுதிகளில் போராடிவரும், ஐ.எஸ்.ஜ.எஸ் போராளிகளின் பிடியில் பிரிட்டன் பத்திரிகையாளர் ஒருவர் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் பிடித்துள்ளனர். அவற்றை ஒற்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை ஏற்படுத்தியுள்ளனர்.

முன்னனர், அமெரிக்க தாக்குதலுகு எதிராக அந்நாட்டு பத்திரிகையளர் ஜேம்ஸ் போலோ என்பவரை கழுத்தை துண்டித்து கொலை செய்தனர்.

அதைத் தொடரந்து ஸ்டீவன்ஸ்டோலப் என்ற செய்தியாளரையும் அதே போன்று கொலை செய்தனர். இதற்கிடையே பிரிட்டனை சேர்ந்த செய்தியாளர் ஒருவரையும் தலையை துண்டித்து கொலை செய்தனர்.

இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த ஜான் கேன்டில் என்ற செய்தியாளரை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருப்பதாக வீடியோ ஒன்றை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

மேற்கத்திய ஊடகங்கள் தங்களை எப்படி சித்தரிக்கிறது என்ற உண்மையை விரைவில் வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.