வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2017 (11:34 IST)

லண்டனில் இளம் வயதிலேயே கோடீஸ்வரரான இந்திய இளைஞர்

லண்டனைச் சேர்ந்தவர் அக்‌ஷ்ய் ரூபரேலியா.இந்திய வம்சாவளியை சேந்த இவர் தற்போது பள்ளியில் படித்து வருகிறார். ஆனால் இங்கிலாந்தில் உள்ள இளம் கோடீஸ்வரர்கள் லிஸ்டில் இவர் இணைந்துள்ளார். அதாவது பள்ளியில் படிக்கும்போதே இவர் செய்துவந்த ரியல் எஸ்டேட் தொழில்தான் இவரை இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைத்துள்ளது.


 


தனது உறவினர்களிடம் ரூ.7 லட்சம் கடனாக பெற்று இந்த தொழிலை துவக்கினார். ஒரு வருடத்தில் ரூ.1000 கோடிக்கு வியாபாரம் செய்துள்ள அவர் அதன் மூலம் ரூ.120 கோடி லாபம் சம்பாதித்துள்ளார். தற்போது இவரது நிறுவனத்தில் 12 பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.