வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 15 ஜூன் 2016 (07:51 IST)

கணவனுக்கு தெரியாமல் ஜல்சா செய்யும் பெண்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தற்போது செய்திகளிலும், பிறர் மூலமாகவும் நாம் அதிகமாக கள்ளக்காதல் பற்றிய தகவல்களை படிக்கிறோம். இந்த கள்ளக்காதல் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறதே தவிர குறையவில்லை.


 
 
கள்ளக்காதலால் பல குடும்பங்கள் சீரழிந்துவிட்டன. குடும்ப உறவுகள் சிதைக்கப்படுகின்றன. சில சமையங்களில் உயிர்களை கூட கொல்லும் அளவுக்கு செல்கிறது இந்த கள்ளக்காதல் வெறி.
 
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற தாய், கணவனை கொன்ற மனைவி, மனைவியை கொன்ற கணவன். இப்படியான வன்முறை மிகுந்த செய்திகள் தினம்தோறும் நிகழ்ந்தவாறே உள்ளது.
 
இது இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இப்படி கள்ளக்காதல் தொடர்பான ஆய்வில் தங்கள் கணவன்களுக்கு தெரியாமல் 40 முதல் 55 சதவீத பெண்கள் 40 வயதுக்கு முன்னரே கள்ளக்காதலில் ஈடுபடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
 
இந்த ஆய்வின் படி உலகில் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களில் இந்தியா முதல் 10 இடத்துக்குள் வந்துள்ளது. நைஜிரியா, தாய்லாந்து, பிரிட்டிஷ், மலேசியா, பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவில் பெண்கள் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.