வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 27 மே 2016 (16:24 IST)

இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ வெளியிட்ட 30 பேர் கைது

தன்னுடைய ஆண் நண்பரை சந்திக்க சென்ற ஒரு இளம்பெண்ணை 30 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது.


 

 
பிரேசில் நாட்டில் ரியோ ஜெனிரோ நகரை சேர்ந்த அந்த பெண், தன்னுடைய ஆண் நண்பரை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து மயக்கமடைய செய்த அந்த ஆண் நண்பர், அவரது நண்பர்கள் பலரை அழைத்து அந்த பெண்ணை அவர்களுக்கு விருந்தாக்கியுள்ளார். மேலும் அதை வீடியோவும் எடுத்துள்ளார்.
 
அடுத்த நாள் நிர்வாண கோலத்தில், அந்த இடத்திலிருந்து அந்த பெண் மீட்கப்பட்டுள்ளார். அதையடுத்து அந்த பெண் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில், அவரது ஆண் நண்பர் உட்பட 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
இதற்கிடையில் அந்த வீடியோ வெளியானதால், பிரேசிலில் இருக்கும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரேசிலில் பாலியல் வன்முறை கலாச்சாரம் பெருகி வருவதை அந்த வீடியோ காட்டுவதாக, இணைய தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.