1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 6 பிப்ரவரி 2016 (13:33 IST)

காதலியை 8 மாதம் பாதாள சிறையில் அடைத்து வைத்த கொடூரம் : வீடியோ

முடநம்பிக்கை காரணமாக, தனது காதலியை 8 மாதம் பாதள சிறையில் அடைத்து வைத்த கொடூரம் தான்சானியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவில் படித்தவர்கள் எண்ணிக்கை குறைவு. இதனால் அங்கு முடப்பழக்க வழக்கங்களும் அதிகம். 
 
அந்த நாட்டில் உள்ள ஒரு இளைஞருக்கு பணக்காரராக ஆக வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஒரு மந்திரவாதியிடம் கேட்டுள்ளார். நீ மிகவும் நேசிக்கும் ஒருவரை பூமிக்கு அடியில் ஒளித்து வைத்தால் சீக்கிரம் பணக்காரன் ஆகலாம் என அந்த மந்திரவாதி ஐடியா கொடுத்துள்ளார்.


 

 
அதன்படி, தனது வீட்டின் அருகில், ஒரு பூமிக்கடியில் ஒரு பாதாள அறையை உருவாக்கினார். அதில் தான் நேசிக்கும், 20 வயது காதலியை நிர்வாணமாக அடைத்து வைத்தார். அந்த பெண்ணுக்கு வாரம் இரு முறை மட்டுமே உணவு கொடுத்துள்ளார். கடந்த எட்டு மாதங்களாக அந்த பெண், பாதாள சிறையில் இருந்துள்ளார்.
 
இந்த விபரம் எப்படியோ வெளியே கசிந்து, போலிசார் வந்து அந்த பெண்ணை தற்போது மீட்டுள்ளனர். அந்த வாலிபரையும் கைது செய்யப்பட்டார்.
 
இந்த சம்பவம் தான்சானியா நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.