பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் சாலை ஒன்றில் ஆளில்லாமல் பைக் ஒன்று செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஓட்டுனர் இல்லாமல் பைக் தானாக செல்லும் வீடியோவை ஆவி ஓட்டிச்சென்றதாக தகவல்கள் வெளியாகின.
இது பலரையும் ஆச்சரியத்திலும் அச்சத்திலும் அழ்த்தியது. ஆனால், இந்த வீடியோவை பற்றிய உண்மையான தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வாகனத்தை ஓட்டியவருக்கு விபத்து ஏற்பட்ட பிறகு வாகனம் ஆளில்லாமல் சென்றிருக்கிறது. கியர் மாற்றப்படாத நிலையில் விபத்தில் ஆக்ஸிலேட்டர் கோளாறும் ஏற்பட்டதால் பைக் தானாகவே ஓடியுள்ளது என்று தெரியவந்துள்ளது.