வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2016 (22:14 IST)

பர்வேஸ் முஷரப் மருத்துவமனையில் அனுமதி

பர்வேஸ் முஷரப் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலக்குறைவால் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.
 

 
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் மீது, தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணைக்கு அவர் வருவதாக இருந்தது.
 
இந்த நிலையில், அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், உடனே கராச்சி அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
இதே போல, உடல் நிலையைக் காரணம் காட்டி பல்வேறு முறை விசாரணையில் இருந்து முஷாராப் எஸ்கேப் ஆகியுள்ளார்.