1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2015 (07:21 IST)

ஆகாயத்தில் பெட்ரோல் பங்க்: இனி பறந்துகொண்டே விமானத்தில் பெட்ரோலை நிரப்பிக்கொள்ளலாம்

வானில் பறக்கும்போதே விமானத்திற்குத் தேவையான எரிபொருளை நிரப்பிக்கொள்ளும் திட்டத்தை ஐரோப்பிய விஞ்ஞானிகளின் உருவாக்கியுள்ளனர்.


 

 
நீண்ட தூரம் செல்லும் விமானங்கள், ஒரு சில விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காகவே நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த குறையை போக்க புதிய ஆய்வை மேற்கொண்ட ஐரோப்பிய விஞ்ஞானிகள் குருய்சர் எனேபிள்ட் விமான போக்குவரத்து திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
 
இந்த திட்டத்தின்படி, ஒரு விமானத்தில் எரிபொருள் மட்டும் நிரப்பப்பட்டிருக்கும். அதில் நிரப்பட்ட எரிபொருள் மூலம், 5 விமானங்கள் வரை வானில் பறக்கும் போதே பெட்ரோலை நிரப்பிக்கொள்ளமுடியும். தொழில்நுட்ப ரீதியாக இந்த முறை சாத்தியமானது என்று நிரூபித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால்
 
ஐரோப்பாவைச் சேர்ந்த 9 நிறுவன விஞ்ஞானிகளின் கூட்டுக்குழு க்ரூய்சர் - பீடர் கருத்தாக்க முறையில் நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் இந்த புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.
 
எரிபொருளை நிரப்பிய விமானமானது, 5 பயணிகள் விமானத்துக்குத் தேவையான  விமானங்கள் பறக்கும் பாதையில் பல்வேறு முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும். பயணிகள் விமானத்திலிருந்து எரிபொருள் தேவைக்கான அழைப்பு வரும்போது, எரிபொருள் நிரப்பப்பட்ட விமானமானது, நிறுத்தப்பட்டுள்ள இடத்திலிருந்து டேக் ஆப் செய்து பயணிகள் விமானத்துக்குக் கீழே பறக்கும்.
 
இவ்வாறு பறந்தபடியே, அந்த விமானத்தில் இருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எரிபொருள் டேங்கிலிருந்து பம்பு மூலம் பயணிகள் விமானத்திற்கு தேவையான எரிபொருளை நிரப்பும். அதன்பின்னர், எரிபொருள் நிரப்பிய விமானம் பத்திரமாக தரையிறங்கும்.
 
இந்த திட்டத்தின் மூலம், நான்கில் ஒரு பங்கு பெட்ரோலை மிச்சப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.