வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2015 (20:57 IST)

குறுந்தகவலால் சண்டை; கணவனை அடிக்க முடியாமல் குழந்தையை மிதித்த தாய்

குறுந்தகவலால் வந்த சண்டையில் மனைவி ஒருவர் கணவனை அடிக்க முடியாமல் குழந்தையை மிதித்துள்ளார்.
 
ரஷ்யாவின் மேற்கு நகரில் உள்ள ஒரு பூங்காவிற்கு 32 வயதுடைய கணவரும், அவரது மனைவியும் தங்களது 18 மாத குழந்தையுடன் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளனர். அப்போது மனைவியின் தொலைபேசியின் தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.
 

 
இதனால் கணவன், மனைவி இருக்குமிடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மனைவி தனது 18 மாத குழந்தையை தரையில் போட்டி மிதித்து உள்ளார். சிறிது நேரத்தில் கணவனும், மனைவியும் வேறு வேறு ஒரு திசையில் சென்றுள்ளனர். தரையில் குழந்தை அநாதையாக கிடந்துள்ளது.
 
உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளனர். குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார். இதனை அவ்வழியாக சென்ற ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளார்.