வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 2 அக்டோபர் 2015 (16:49 IST)

சப்பாத்தியை வட்டமாக சுடாத மகளை கொன்ற தந்தை,அண்ணன் கைது

சப்பாத்தியை வட்டமாக சுடவில்லை என்று, பதிமூன்று வயது சிறுமியை அவளது தந்தையும், சகோதரனும் அடித்துக் கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.


 

 
பாகிஸ்தானில், அஜீம் பார்க் பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமி அனீகா என்பவள், தன் வீட்டு சமையல் வேலையை செய்து வந்தாள். சம்பவத்தன்று அந்த சிறுமி சப்பாத்தி தயாரித்து, தனது தந்தைக்கும், அண்ணனுக்கும் கொடுத்தாள். 
 
அந்த சப்பாத்தி வட்டமாக இல்லையாம். அதனால் கோபமடைந்த அவரது தந்தையும், அண்ணனும் அவளை அடித்து உதைத்துள்ளனர். இதில் அந்த சிறுமி பரிதாபமாக இறந்துபோனாள். 
 
இது யாருக்கும் தெரியக்கூடாது என்று கருதிய அவர்கள், தங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே அந்தச் சிறுமியின் உடலைப் புதைத்து விட்டனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறை இருவரையும் கைது செய்துள்ளது.