வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 19 ஏப்ரல் 2017 (16:00 IST)

இலங்கையில் முதல் முறையாக ஆண் கர்ப்பம்

வைத்தியசாலை ஒன்றினால் வழங்கப்பட்ட அறிக்கையில் ஆண் ஒருவர் கர்ப்பமான சம்பவம் பதிவாகியுள்ளது. 35வயது ஆண் ஒருவர் தவறான பரிசோதனை அறிக்கை மூலம் கர்ப்பமானது தெரியவந்துள்ளது.


 

 
சூரியவெவ வைத்தியசாலையில் 35 வயது ஆண் ஒருவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் அவர் கர்ப்பமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில் இதுபோன்று பல நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
 
இந்நிலையில் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகள் மற்றும் அவர்கள் பெற்றுக் கொள்ளும் மருத்துவ அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது.
 
இதனால் வைத்திசாலைக்கு செல்லும் அப்பகுதியில் மக்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர்.