வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (17:00 IST)

எலிசபெத் ராணியின் கணவருடைய உதவியாளர் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவருடைய உதவியாளர் பெஞ்சமின் ஹெர்மான் 12 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். இவரது முன்னாள் உதவியாளர் 79 வயதுடைய பெஞ்சமின் ஹெர்மான். இவர் கடந்த 1971 முதல் 1974 ஆம் ஆண்டு வரை இளவரசர் பிலிப்பிடம் பணிபுரிந்தார்.

அப்போது அவர் அரச மாளிகையில் பணிபுரிந்த 12 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது ஹெர்மான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இளவரசர் பிலிப் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இவரும் பங்கேற்று வந்தார். எனவே டைரியில் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளரா என்பது குறித்து நீதிமன்றத்தில் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.