வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Geetha priya
Last Updated : புதன், 2 ஏப்ரல் 2014 (18:37 IST)

ஆசைகள் நிறைவேறிய பின் உயிரிழந்த 4 வயது சிறுவன்

இங்கிலாந்தில் மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில், 4 வயது சிறுவன் ஒருவர் அவரின் ஆசைகள் பூர்த்தி ஆன நிலையில் உயிரிழந்தார். 
 
இங்கிலாந்தை சேர்ந்தவர்  ஜாக் ராபின்சன் என்ற 4 வயது சிறுவன். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் மூளையில் கட்டி இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. 
இதையடுத்து, வான்சிஸ்டர் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  இச்சிறுவனுக்கு, அறுவை சிகிச்சை மூலம் சில கட்டிகள் அகற்றப்பட்டன.
 
இதனையடுத்து கீமோ தரப்பி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகள் மூலம் மற்ற கட்டிகளை அழி்க்க மருத்துவர்கள் முயன்றபோது பலனின்றி போனதால் சிறுவன் வாழும் நாட்கள் கேள்விக்குறியாகின.
 
 

இதனால், இறப்பதற்கு முன்பே தனது ஆசைகள் நிறைவேற வேண்டும் என கருதிய சிறுவன், நடிகர் மாட் ஸ்மித் மற்றும் கேரி பார்லோ என்ற பாப் பாடகரை பார்க்க வேண்டும் என்றும் முன்கூட்டியே  கிறிஸ்மஸ்,  பிறந்தநாள் கொண்டாடுவதுடன், நீராவி ரயில் இன்ஜினில் பயணிக்க வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இவரது விருப்பத்திற்கு இணங்க பிரிட்டிஷ் நடிகர் மற்றும் பாப் பாடகர் இவனை மருத்துவமனையில் வந்து சந்தித்தனர்.
 
இதனைதொடர்ந்து கிறிஸ்மஸ் மற்றும் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு, நீராவி ரயில் இன்ஜினிலும் சிறுவனுடன் பெற்றோர் பயணித்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.
 
தன் ஆசைகள் அனைத்தும் நிறைவேறிய நிலையில், சிறுவன் நேற்று உயிரிழந்ததாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.