1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 19 நவம்பர் 2014 (17:49 IST)

புகைப்படத்திற்கு முகம் காட்டிய பெண்ணை திருமணத்தன்று இரவு விவாகரத்து செய்த கணவன்

சவுதி அரேபியாவில் திருமணத்தன்று கணவனுக்கு முதலில் முகத்தை காட்டாமல் புகைப்படத்திற்கு முகம் காட்டிய மனைவியை கணவர் விவாகரத்து செய்தார்.
 
சவுதி அரேபியாவில் உள்ள தெற்கு நகரமான மதீனாவைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்ததுள்ளது. அதற்கு முன்பு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.
 

 
இந்நிலையில் திருமணம் நடந்த அன்று இரவு, மணமகனும், மணமகளும் நேருக்கு நேர் முகம் பார்க்கும் சடங்கு நடந்தது. அப்போது போட்டோகிராபர் மணமகளிடம் முகம் காட்டும்படி கூறியுள்ளார். உடனே அவரும் சிரித்தபடி பர்தாவை விலக்கிவிட்டு போட்டோவுக்கு முகம் காட்டியுள்ளார். 
 
இதனால் எரிச்சலடைந்த மணமகன், "நான் திருமணம் செய்ய விரும்பிய பெண் நீ அல்ல" என்று கூறி , விவாகரத்து கோரியுள்ளார்.
 
இதனால் திருமணத்துக்கு வந்த உறவினர்களும் மணமகளும், கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பிரச்சினையை தீர்த்து விவாகரத்தை நிறுத்த முயன்றனர். இதனால் மணமகள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.