1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 நவம்பர் 2016 (10:22 IST)

நீச்சல் குளத்தில் தீடீரென புகுந்து தம்பதியரை தாக்கிய முதலை (வீடியோ)

நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருந்த தம்பதியரை ஒரு முதலை திடீர்ரென வந்து தாக்கிய சம்பவம் கார்பியா நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜிம்பாப்வே நாட்டைச்சேர்ந்த இளம் தம்பதியர், கார்பியா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் ஜாலியாக நீந்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த நீச்சல் குளத்திற்குள் முதலை ஒன்று புகுந்தது. 
 
குளத்திற்குள் முதலையைக் கண்ட கணவர், மனைவியை தனியாக விட்டு தப்பினார். அந்த முதலையிடம் மனைவி மாட்டிக்கொண்டார்.
 
ஒருவழியாக தன்னை தாக்க வந்த முதலையிடமிருந்து அந்த பெண்ணும் தப்பிவிடுகிறார். நீச்சல் குளத்தின் அருகாமையில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. 
 
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இதோ அந்த வீடியோ.....