செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2017 (11:03 IST)

கையில் காதை வளர்த்த சீனர்!!

சீனாவில் விபத்தில் சிக்கிய ஒருவருக்கு கையில் காதை வளர்த்து அதை அவருக்கு பொருத்தி மருத்துவர்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளனர்.


 
 
சீனாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் காதை இழந்த ஜி என்பவருக்கு செயற்கையாக காதை கையில் வளர்த்து, அதை பொருத்துவதில் வெற்றியடைந்துள்ளனர் சீன மருத்துவர்கள்.
 
3டி தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, விலா குருத்தெலும்பை காது போல் வடிவமைத்து அது கையில் வளர்க்கப்பட்டது. 
 
கடந்த நவம்பர் மாதம் ஜி காதை வளர்க்க தொடங்கினார். வளரவளர அந்தக் காது உணர்ச்சியுள்ளகாதாக மாறிவிட்டதாக மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.
 
பின்னர், நன்கு வளர்ச்சி அடைந்த அந்த காதை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி காது இருக்க வேண்டிய இடத்தில் பொருத்தியுள்ளனர்.