வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (18:30 IST)

வழி தெரியாமல் தவித்தவருக்கு வழிகாட்டிய பூனை

சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் வழி தெரியாமல் சிக்கித் தவித்த சுற்றுலா பயணியை பூனை ஒன்று வழிநடத்தி, பாதுகாப்பாக விடுதிக்கு கொண்டு சேர்த்துள்ளது.



 

 
சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் வழி தெரியாமல் சிக்கித் தவித்த சுற்றுலா பயணிக்கு பூனை ஒன்று வழிகாட்டி, பாதுகாப்பாக விடுதிக்கு கொண்டு சேர்த்துள்ளது.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
ஜிம்மல்வேல்டு  கிராமத்திற்கு அருகே உள்ள மலையில் பயணித்தபோது, அங்கிருந்து கீழே இறங்கும் வழி மறந்துபோனது. வழியை வரைப்படத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். 
 
வரைப்படத்தில் இருந்த வழி மூடப்பட்டு இருந்தது. அப்போது வெள்ளை மற்றும் கருப்பு நிறத்துடன் ஒரு பூனை, என்னை ஒரு பாதையில் வழிநடத்தி சென்றது.
 
அவ்வப்போது பின்னல் நான் வருகிறேனா என்று பார்த்துக்கெண்டே முன்னே சென்றது. இறுதியில் என்னை ஒரு பாதுகாப்பாக விடுதிக்கு கொண்டு சேர்த்தது.
 
இவ்வாறு அவர் கூறினார்.