வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 26 மார்ச் 2015 (10:22 IST)

பெற்றோர்களை கொன்று உடல் உறுப்புகளை சமைத்து தின்ற கொடூர மனிதன்

பெற்றோர்களை கொன்று அவர்களின் உடல் உறுப்புகளை சமைத்து தின்ற கொடூர மனிதனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஹென்றி சாவ் (31) என்ற வாலிபர், ஹாங்காங்கில் வசித்து வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டு ஹென்றி சாவி-இன் பெற்றோர்கள் திடீரென காணாமல் போயுள்ளனர். சில நாட்கள் கழித்து, அவர்களது துண்டிக்கப்பட்ட தலைகள் மட்டும், வீட்டின் குளிர்பதனப் பெட்டியில் கண்டெடுக்கப்பட்டன.
 

 
அப்போது ஹென்றி சாவ்விடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளானர். விசாரணையில், தன்னுடைய பெற்றோர்களையே கொன்று சமைத்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர் இருவரையும் கொன்று விட்டு, பிறகு, உடல் உறுப்புகள் மீது உப்பு தடவி சமைத்துள்ளார்.
 
இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் மீது நீதிமன்றம் இரட்டைக் கொலை செய்த குற்றவாளி என்று தீர்ப்பு அளித்துள்ளது.