வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 16 மார்ச் 2015 (17:54 IST)

கொதிக்கும் எண்ணெயில் அமர்ந்து தியானம் செய்யும் புத்த துறவி [வீடியோ]

தாய்லாந்தில் புத்த துறவி ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் அமர்ந்து தியானம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
 
எண்ணெயில் அமர்ந்து தியானம் செய்யும் புத்த துறவி
தாய்லாந்தின் நோங் புவா லம்பு மாகாணத்தை சேர்ந்த புத்த துறவி கொதிக்கும் எண்ணெயில் உட்கார்த்து தியானம் செய்துள்ளார். ஒரு பெரிய அண்டாவில் முழுக்கு எண்ணெய் நிரப்பப்பட்டு உள்ளது. எண்ணெய் உள்ள அண்டாவின் கீழே நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் துறவி, அமைதியாக தியானத்தை மேற்கொள்கிறார்.
 
இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு யூ டியூப் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் பரவி வருகிறது. மேலும் இவர் தொட்டு ஆசி வழங்குபவர்கள் சக்தி நிறைந்தவராக மாறுகிறார்கள் என்று நம்பப்படுகிறது. இது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
 
இது குறித்து சுலாலோங்கார்ன் பல்கலைக்கழக அறிவியல் பேராசிரியர் கூறுகையில், “அவர் எந்த கொதிநிலையில் அமர்ந்திருக்கிறார் என்பது தெரிய வரும்போதுதான் அது எந்தளவிற்கு உண்மை என்று கூறமுடியும்.
 
மேலும், அதை பார்க்கையில், அதில் உள்ள எண்ணெய் கொதிப்பது போன்று தோன்றவில்லை. அந்த பாத்திரமும் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது. ஒருவேளை அந்த பாத்திரம் வெப்பத்தை பாதுகாக்கும் இரண்டு அடுக்குகளை கொண்டதாக இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.
 
வீடியோ கீழே: