1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : புதன், 22 அக்டோபர் 2014 (18:43 IST)

வெளிநாட்டு தம்பதியர் மர்மமான முறையில் மரணம்

இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்த வெளிநாட்டு தம்பதிகள் ஆக்ரா ஒட்டலில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க ஒரு பிரிட்டன்  தம்பதிகள் ஆலிவர் கேஸ்க்கின் மற்றும் அலெக்ஸாண்ட்ரா கேஸ்க்கின் ஆகியோர் அக், 20 நேற்று முன்தினம் மாலை ஆக்ரா நகருக்கு வந்தனர்.
 
இருவரும் ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். இந்நிலையில் வெகு நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
 
அவர்கள் இருந்த அறையில் சில மருந்து பாட்டில்கள் இருந்தது. மேலும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இருவரும் பிணமாக கிடந்ததை பார்த்த ஊழியர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
 
மேலும் இதுகுறித்து டெல்லியில் உள்ள பிரிட்டன் நாட்டு உயர் தூதரகத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.