வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 22 ஜூன் 2018 (16:17 IST)

இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருப்பது ஆபத்தானது; பூடான் அரசு எச்சரிக்கை

இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டாம் என்று பூடானின் ராயல் மானிட்டரி ஆணையம் அந்நாட்டு குடிமக்களை எச்சரித்துள்ளது.

 
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும் பூடான் நாடு அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பூடானின் ராயல் மானிட்டரி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
இந்திய ரூபாயை ரொக்கமாக கையில் வைத்து செலவு செய்வதையும், சேமித்து வைப்பதையும் தவிர்க்கவும். 500 ரூபாயில் கள்ள நோட்டுகள் அதிகமாக புழுங்குவதால் அதை வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் இருங்கள்.
 
ரிசர்வ் வங்கி திடீரென நடவடிக்கை மேற்கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.