வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 11 மே 2016 (18:02 IST)

மார்க்கெட் பகுதியில் தற்கொலைப் படை தாக்குதல் - 50 பேர் பலி

இராக்கில் ஐஎஸ் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

 
இராக் தலைநகர் பாக்தாத்தில் புதனன்று காலை ஷியா முஸ்லீம்கள் அதிகமாக வாழும் மாவட்டத்தில் உள்ள பரபரப்பான மார்க்கெட் பகுதியில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் வெடித்து சிதறியது.
 
இந்த தாக்குதலில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சுமார் 60 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு குறித்து அந்நாட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கார் குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.