1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (09:16 IST)

கவுதமாலா நிலச்சரி: பலி எண்ணிக்கை 131 ஆக அதிகரிப்பு

கவுதமாலாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது.


 

 
 
கவுதமாலாவின் தலைநகரான கவுதமாலா நகரில் கடந்த ஒருவார காலமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மலைப்பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் தங்களது வீடுகளையும் உடமைகளையும் இழந்தனர்.
 
நிலச்சரிவு ஏற்பட்ட அன்று பலி எண்ணிக்கை 25 ஆக இருந்தது. ஏராளமானோர் மண்ணில் புதைந்ததால் பலி எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து தற்போது 131 ஆக அதிகரித்துள்ளது.
 
300க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.மீட்பு பணியில் அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படை ஈடுபட்டுள்ளது.