1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2017 (14:41 IST)

சாகசம் செய்ய நினைத்தவருக்கு நேர்ந்த சோகம்

சீனாவில் 62 மாடி கட்டிடத்தில் சாகசம் செய்ய முயன்ற வாலிபர் தவறி விழுந்து மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி வாசிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
சீனாவின் சூப்பர்மேன் என அழைக்கபடும்  வு யாங்கிங் என்ற வாலிபர் உயரமான கட்டிடங்களின் மீது ஏறி சாகசங்கள் செய்து அதனை வீடியோ எடுத்து சீன இணையதளங்களில் பதிவு செய்து வந்தார். ஆனால் அந்த சாகசமே அவரின் மரணத்திர்கு காரணமாக அமைந்தது வேதனைக்குரிய விஷயமாகும்.
 
யாங்கிங் சாகசம் செய்வதற்காக சீனாவில் உள்ள 62 மாடி கட்டிடத்தின் மாடியில் மேல் ஏறி  தயாரானார். யாங்கிங்கின் சாகசத்தை வீடியோ எடுக்க அனைவரும் தயாராக இருந்தனர். அவர் மாடியில் புல்-அப் செய்தவாறே இரண்டு கால்களையும் கீழே தொங்கவிட்டு கைகளால் கட்டிடத்தை பிடித்திருந்தார். திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்த யாங்கிங் கை நழுவி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 
 
சாகசம் செய்ய முயன்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.