வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2015 (14:57 IST)

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சிரியா அதிபர் அறிவிப்பு

சிரியாவில் நடந்துவரும உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார் என்று சிரியா அதிபர் பஷிர் அல் ஆசாத் கூறியுள்ளார். 
 
சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. இந்தப் போரில் பல லட்சம் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் தனியார் தொலைக்கட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆசாத், "அமெரிக்கவுடன் பேச்சு நடத்த தயாராகவுள்ளேன்.
 
தற்போது உள்ள சூழலில் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது சிரியாவுக்கு நல்ல விளைவுகளையே ஏற்படுத்தும். ஆனால் எங்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.