செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 10 ஜூலை 2014 (16:24 IST)

அமெரிக்க குடியிருப்புப் பகுதியில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி, குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண குடியிருப்புப் பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 5 பேர் பலியாகினர், குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

ஹோஸ்டன் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் திடீரென புகுந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 5 பேர் பலியாகினர். 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அருகில் உள்ள இடத்தில் பதுங்கியிருக்கலாம் என்ற அடிப்படையில் அமெரிக்க காவல்துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர்.