வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 27 அக்டோபர் 2016 (20:08 IST)

ஆப்கனிஸ்தானில் அமெரிக்கா அதிரடி தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா தலைவர்களை குறிவைத்து அமெரிக்கா, ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.


 

 
ஆப்கானிஸ்தான் நாட்டின் குணார் மாகாணத்தில் அல் கொய்தா பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதால், அந்த இயக்கத்தின் முக்கியமான தலைவர்கள் பாரூக் அல் கட்டானி மற்றும் பிலால் அல் உட்டாபி ஆகிய இருவரையும் குறிவைத்து அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. 
 
இந்த தாக்குதலில் அல் கொய்தா தலைவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக நம்புவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் கடந்த 23ஆம் தேதி நடத்தப்பட்டதாக ராணுவ தலைமையகம் ஊடகப்பரிவு செயலாளர் பீட்டர் குக் தெரிவித்தார்.