வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 30 ஜூலை 2016 (17:19 IST)

தேனிலவு முடித்த கையுடன் கணவரை தவிக்கவிட்டு காதலுடன் ஓடிய பெண்

டெல்லி விமான நிலையத்தில் தேனிலவு முடித்துவிட்டு திரும்பிய கையுடன் கணவரை தவிக்கவிட்டு பெண் ஒருவர் அவரது காதலுடன் தப்பி ஓடியுள்ளார்.


 

 
தேனிலவு சென்ற சர்வேஷ் தனது மனைவியுடன் பாக்தோக்ராவிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்தார். டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து லக்னோ செல்ல மற்றொரு விமானத்தில் அவர்கள் முன்பதிவுசெய்திருந்தனர். அதற்காக டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்தபோது சர்வேஷின் மனைவி கழிப்பறைக்குச் சென்று வருவதாக சொல்லிச்சென்றுள்ளார்.
 
ஆனால், அரைமணிநேரம் ஆகியும் மனைவி திரும்பி வராததால் சர்வேஷ் மனைவியின் படத்தைக் காட்டி ஒரு பெண்ணிடம் உதவி கேட்டிருக்கிறார். அந்த பெண் சர்வேஷின் மனைவி கழிப்பறையில் இல்லை என்று கூறியதும் அதிர்ச்சியடைந்த சர்வேஷ் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார்.
 
அவர்கள், கண்காணிப்புக் கேமரா மூலம் பதிவான காட்சிகளை வைத்து தேடியுள்ளனர். அதில், சர்வேஷின் மனைவி காலை 6.14க்கு கழிப்பறைக்கு உள்ளே சென்று, பின்னர் 6.17க்கு உள்ளிருந்து படுதா அணிந்து கொண்டு வெளியே வந்தவர், விமான நிலையத்தின் வெளியே உள்ள மூன்றாவது லேனில் காத்திருந்த ஒரு ஆணுடன் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
 
இதனால், படுதா அணிந்த பெண் தனது மனைவியாக இருக்கலாம் என்று சர்வேஷ் சந்தேகித்துள்ளார். இருப்பினும் சர்வேஷின் மனைவி எப்படி மாயமானர் என்று தெரியாமல் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.