வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 24 செப்டம்பர் 2018 (08:26 IST)

கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்த கொடூரர்கள்

அமெரிக்காவில் ஒரு கொடூர ஜோடி குழந்தை வேண்டும் என்பதற்காக   கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த சவன்னா என்ற 22 வயது பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் காணாமல் போனதால் இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
 
இதனிடையே சவன்னாவின் சடலம் ஒரு காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது
 
இதுகுறித்து விசாரித்து வந்த போலீஸார் சவன்னாவின் பக்கத்து வீட்டாரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மீது சந்தேகித்த போலீஸார் அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் குழந்தை இல்லாத ஜோடி குழந்தைக்கு ஆசைப்பட்டு கர்ப்பிணியாக இருந்த சவன்னாவின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்துள்ளனர் என்பதும் இதில் சவன்னா பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
 
போலீஸார் அந்த ஜோடியை கைது செய்தனர். குழந்தைக்காக ஒரு அப்பாவி பெண்ணை கொலை செய்த இவர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.