வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 27 ஜூன் 2016 (13:57 IST)

தம்பியை சுட்டுக் கொன்ற 6 வயது சிறுவன்

அமெரிக்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது தம்பியை 6 வயது சிறுவன் சுட்டுக் கொன்றான்.


 

 
அமெரிக்காவில் நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஸ்புருல் என்பவருக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். அந்த இரண்டு சிறுவர்களும் தங்கள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது தயாரின் குண்டு நிரப்பிய துப்பாக்கியை எடுத்துக் கொண்டு விளையாடியுள்ளனர். 
 
6 வயது சிறுவன் விளையாட்டாக தன் தம்பியை துப்பாக்கியால் சுட்டுயுள்ளான். இதில் அந்த சிறுவன் இறந்து விட்டான். சிறுவனின் தாயார் இடியானா கைது செய்யப்பட்டார். குழந்தையின் நலனுக்கு எதிராக செயல் பட்டதாகவும், ஆயுதங்களை பாதுகாக்க தவறியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.