வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2015 (18:53 IST)

30 கிருஸ்தவர்களின் தலையை வெட்டிக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர்

லிபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் 30 எத்தியோப்பிய கிருஸ்தவர்களின் தலையை வெட்டிக் கொன்றனர். 
 
லிபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட எத்தியோப்பிய கிருஸ்தவர்களின் தலையை வெட்டிக் கொல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் சிறைப்பிடிக்கப்பட்ட 30 பேரும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
 

 
பின்னால் நின்று கொண்டிருக்கும் தீவிரவாதிகள் அவர்களை மதம் மாறும்படி வலியுறுத்துகின்றனர். கிறிஸ்தவர்கள் எல்லோரும் இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் வரி செலுத்த வேண்டும் என்றும் தீவிரவாதிகள் வலியுறுத்துகின்றன.
 
இதனை தொடர்ந்து கடற்கரையில் 12 எத்தியோப்பிய கிறிஸ்தவர்களின் தலையை துண்டித்தும், பாலைவனப்பகுதியில் எஞ்சியவர்களை கொடூரமாக சுட்டு வீழத்தும் காட்சிகளும் வீடியோ முடிகிறது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.