1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By murugan
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (12:30 IST)

ஒரே நாளில் ஒரு மருத்துவமனையில் குழந்தைப் பெற்ற மூன்று சகோதரிகள்: அயர்லாந்தில் அதிசயம்

அயர்லாந்தில் உடன் பிறந்த மூன்று சகோதரிகள் ஒரே நாளில், ஒரு மருத்துவமனையில் குழந்தைப் பெற்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தின் கேஸ்டில்பார் நகரில் வசிக்கும் சகோதரிகளான மைரெட் பிட்ஷ்பட்ரிக், ஜோலின் காட்பிரே மற்றும் பெர்னி வார்டு இவர்கள் தங்கள் இருப்பிடம் அருகே உள்ள மயோ பொது மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்கள் மூவருக்கும் ஒரே நாளில் குழந்தைகள் பிறந்தன. மொத்தம் இரண்டு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இது அங்குள்ள மருத்துவர்களுக்கும், நர்சுகளுக்கும் பெரும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நிகழ்வு எங்களுக்கு தெரிந்தவரை இந்த மருத்துவமனையில் இதுவரை நடந்ததில்லை என்று கூறியுள்ளனர்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த மூன்று சகோதிரிகளும் பிறந்தது இந்த மருத்துவமனையில்தானாம்.