வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ashok
Last Modified: சனி, 28 நவம்பர் 2015 (11:15 IST)

அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கொலோரடோ மாகாணத்தில் மருத்துவமனைகுள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 
 

 
அமெரிக்காவின் கொலோரடோ மாகாணத்தில் மருத்துவமனையின் குடும்பக் கட்டுப்பாட்டு மையத்திற்குள் புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சூட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.
 
கிட்டதட்ட 5 மணிநேரம் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்து பொதுமக்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த கொலோராடோ காவல்துறையினர் அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உடன்பட வில்லை என்பதால் போலீசாரை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டார்.
 
இந்த துப்பாக்கிச்சூட்டில் காவலர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 3 பேரில் ஒருவர் காவல்துறை அதிகாரி என்று  கொலோரடோ மேயர் ஜான் கூறியுள்ளார்.