1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

சுவையான பருப்பு உருண்டைக் குழம்பு செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
துவரம் பருப்பு - அரை கப்
கடலை பருப்பு - அரை கப்
வெங்காயம் - 7
பூண்டு - ஒன்று
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - அரை அங்குல துண்டு
சோம்பு - 1 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புளி - பெரிய எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் (கலந்தது) - 1 1/2 தேக்கரண்டி
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
தேங்காய் பூ - ஒரு கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை: 
 
உருண்டை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு (வெங்காயம் தவிர) மற்ற  பொருட்களை  சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, ஆவியில்  வேகவைத்து எடுத்துக் வைத்துக் கொள்ளவும். 
 
தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி,  தாளிக்க  கொடுத்துள்ளவற்றை தாளித்து, அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி,  தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

இதனுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்க்கவும். பச்சை  வாசனை போக கொதித்ததும், வேக வைத்துள்ள  உருண்டைகளைப் போட்டு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான பருப்பு உருண்டைக் குழம்பு தயார்.
 
குறிப்பு:
 
உருண்டைகளை வேக வைக்காமலும் போடலாம். எண்ணெயில் பொரித்தும் போடலாம்.