1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்
Written By Webdunia

பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடக்கம்

இன்றைய பங்குச்சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 75.07 புள்ளிகள் ஏற்றம் பெற்று 21062 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசியப் பங்குச்சந்தையான நிப்டி 23.60 புள்ளிகள் ஏற்றம் பெற்று 6262 புள்ளிகளில் காணப்படுகின்றது.

பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹிண்டால்கோ, டி.சி.எஸ், பி.ஹெச்.இ.எல் மற்றும் சன் பார்மடிகல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், மாருதி சுசூகி, ஹெச்.டி.எப்.சி பேங்க், மகேந்திரா&மகேந்திரா, ஹிந்துஸ்தான் யூனியன் மற்றும் என்.டி.பி.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.