வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 12 மார்ச் 2018 (07:59 IST)

டார்ச் லைட் அடித்து ஹெலிகாப்டருக்கு உதவிய பொதுமக்கள்

தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் நேற்று திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயால் அங்கு டிரெக்கிங் சென்ற சுமார் 40 மாணவிகள் சிக்கி கொண்டனர்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவின்பேரில் நேற்று இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன

இந்த நிலையில் மாணவிகள் சிக்கியுள்ள இடம் குறித்து ஹெலிகாப்டரில் இருந்தவர்களுக்கு தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் ஹெலிகாப்டரை பார்த்த பொதுமக்கள் உடனே தங்கள் கையில் இருந்த டார்ச்லைட் மற்றும் மொபைல்போன்களில் இருந்த டார்ச்லைட்டை அடித்து ஹெலிகாப்டரில் இருந்தவர்களுக்கு உதவினர். பொதுமக்களின் இந்த ஒத்துழைப்பை அடுத்த அந்த பகுதியில் இறங்கிய விமானப்படை வீரர்கள் மாணவிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.