வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By abi
Last Updated : புதன், 4 மே 2016 (19:00 IST)

விஜயகாந்த் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்: சரத்குமார் தாக்குதல்

சமக தலைவர் சரத்குமார் பாளையங்கோட்டை பிரச்சாரத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர் என்று கூறினார்.


 

தமிழக சட்டசபை தேர்தலில் சரத்குமார் அதிமுக  கூட்டணியில் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து சரத்குமார் பாளையங்கோட்டையில் அதிமுக வேட்பாளர் ஹைதர் அலியை அதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர் என்றும், விஜயகாந்த் சிந்திக்கும் தண்மை இல்லாதவர் என்றும் கடுமையாக தாக்கி பேசினார்.

மேலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒரு சந்தர்பாவாத கட்சிகளின் கூட்டணி என்றும், முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார் என்றும் கூறினார்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்