வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Murugan
Last Modified: புதன், 4 மே 2016 (19:33 IST)

சென்னை வாக்காளர்களுக்கு நாளை முதல் பூத் ஸ்லிப் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி நாளை முதல் சென்னை மக்களுக்கு பூத் ஸ்லிப் கொடுக்கும் பணி தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


 

 
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் “ வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தை பதிக்கும் பணி வருகிற 8ஆம் தேதி தொடங்கவுள்ளது.
 
இந்நிலையில் சென்னை வாசிகளுக்கு நாளை முதல் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கப்படவுள்ளது. மேலும் சென்னை தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக மூன்று மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.