1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By VM
Last Updated : வியாழன், 27 செப்டம்பர் 2018 (17:15 IST)

உங்களுக்கு வெளியில என்ன பேரு இருக்கு தெரியுமா? சென்ராயன் கலகல...

பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.  ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நான்கு பேரில் ஒருவர் வெற்றியாளராக உள்ளனர்.
இறுதிவாரமான இந்த வாரம் சுபமாக போய்க்கொண்டிருக்கிறது.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக தினமும் வருகிறார்கள். இன்று து மகத் மற்றும் சென்ராயன் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தனர்.
 
இன்று இரண்டு புரோமோ வெளியாகி உள்ளது. ஒரு புரோமோவில், மகத் பேசுகையில், 'நல்லவேளை... நான் இங்க இருந்திருந்தா ஒரு கொலையே செஞ்சுருப்பேன்' என்று நகைச்சுவையாக கூறுகிறார்.
 
இன்னொரு புரோமோவில் உள்ளே வரும் சென்ராயன், ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நான்கு பேருக்கு வெளியில் நல்ல பெயர்  இருப்பதாகவும், இப்பவே ஜெயித்துவிட்டதாகவும் பாராட்டுகிறார்கள்.