செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Murugan
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (12:17 IST)

ஜூலியால் எங்களுக்கும் பிரச்சனை - நண்பர்கள் வேதனை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள ஜூலியின் நடவடிக்கைகள் பற்றி அவரின் நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


 

 
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கு பெற்று மக்களிடையே பிரபலமானவர் ஜூலி. அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், தொடக்கம் முதல் யாருக்கும் பிடிக்காதவராகவே இருந்து வருகிறார் ஜூலி. அதிலும், ஆளுக்கேற்றார் போல் அவர் போடும் பச்சோந்தி வேஷம், அந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியது. அதிலும், ஓவியாவிடம் அவர் நடந்து கொண்ட விதம், அவர் மீது இருந்த அபிப்ராயத்தை காலி செய்தது.  
 
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, கேமரா முன்பு நான் நின்றதில்லை எனக் கூறினார் ஜூலி. ஆனால், ஒரு பாடல் விடீயோ ஆல்பத்தில் அவர் நடித்துள்ளார் எனக் கூறிய நெட்டிசன்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.


 

 
இந்நிலையில், அந்த ஆல்பத்தை இயக்கி எடுத்த நபர், ஜூலியை பற்றி கருத்து தெரிவித்த போது “ஜூலி தனக்கு இருந்த நல்ல பெயரை கெடுத்துக்கொண்டார். அவரால் எங்களையும் பலர் திட்டுகிறார்கள். தனக்கு மட்டுமே முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என அவர் நடந்து கொண்ட விவகாரம் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் எந்த போராட்டத்தில் அவர் கலந்து கொண்டாலும், அவரை மக்கள் நம்ப மாட்டார்கள்” எனக் கூறினார்.