வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 21 ஜூலை 2014 (11:25 IST)

விளக்கம் சொல்லி வில்லங்கத்தை ஒப்புக் கொண்ட அனன்யா

அதிதி படத்தின் போது அப்படத்தின் தயாரிப்பாளர் நிகேஷ்ராமுக்கு அனன்யா தந்த டார்ச்சர் குறித்து அவர் சமீபத்தில் மீடியாவிடம் பகிர்ந்து கொண்டார். அனன்யாவின் ஆடம்பரச் செலவு காரணமாக ஐம்பது லட்சங்கள் இழந்ததாக அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு கூறுவதாக நினைத்து மீண்டும் வில்லங்கத்தில் சிக்கிக் கொண்டார் அனன்யா.
நிகேஷ்ராம் வைத்த முதல் குற்றச்சாட்டு அனன்யாவும், அவரது வுட்பி ஆஞ்சநேயலுவும் வடபழனியில் ஏற்பாடு செய்திருந்த நட்சத்திர ஹோட்டலை புறக்கணித்து அண்ணாசாலையில் உள்ள காஸ்ட்லி ஹோட்டலில் அறை போடச் சொன்னது. வடபழனியில் என்றால் தன்னையும், ஆஞ்சநேயலுவையும் பத்திரிகைக்காரர்கள் பார்த்துவிடுவார்கள், மேலும் அண்ணாசாலையில் உள்ள ஹோட்டலின் உணவுதான் எனக்குப் பிடிக்கும் என்றும் கூறினார்.
 
இதனை அனன்யா மறுக்கவில்லை. வடபழனி ஹோட்டல் எனக்குப் பிடிக்காது அதனால்தான் வேறு ஹோட்டலில் அறை போடச் சொன்னேன் என்றவர், கொடுத்த கால்ஷீட்டை வீணடித்ததால்தான் அதிக நாள் அங்கு தங்க வேண்டியதாயிற்று என்று கூறியுள்ளார். ஆஞ்சநேயலுவும் தயாரிப்பாளர் காசில் தங்கியது குறித்து அவர் வாய் திறக்கவில்லை. அதேபோல் தயாரிப்பாளர் காசில் சொகுசு காரில் ஊர் சுற்றியது. ஹோட்டலில் ரொக்கமாக பணம் வாங்கி அதனை பில்லில் சேர்த்தது குறித்த குற்றச்சாட்டுகளுக்கும் அவர் விளக்கமளிக்கவில்லை.
 
அதிதி படத்துக்காக கென்யா போவதாக இருந்து கடைசி நேரத்தில் போகவில்லை. அந்தக் காட்சிகளை இங்கேயே எடுத்தனர். ஏன் கென்யா போகவில்லை என அதற்குரிய பணத்தையும் அனன்யா வாங்கியுள்ளார். ஆனால் அதனை மறுத்துள்ளவர், கென்யாவுக்கு நான் சுற்றுப்பயணம் போவதாக இருந்தேன். அதிதி படப்பிடிப்பால் போக முடியவில்லை. அதனால் அதற்கான பணத்தை வாங்கிக் கொண்டேன் என்று கூறியுள்ளார். ஆக, அவர் போகாத சுற்றுலாவுக்காக தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைத்துள்ளது அவர் வாயாலேயே வெளிவந்திருக்கிறது.
 
அனன்யா போன்று வெற்று ஆடம்பரத்தால் தயாரிப்பாளர்களை மொட்டையடிப்பவர்களை சினிமாவிலிருந்தே துரத்தியடித்தால்தான் சினிமா உருப்படும்.