வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (15:22 IST)

மணிரத்னம் படம் - க்ளீன் போல்டான நாகார்ஜுன்

மணிரத்னம் இயக்கும் புதிய தெலுங்குப் படத்தில் தானும், மகேஷ்பாபுவும் நடிப்பதை நாகார்ஜுன் உறுதி செய்தார்.
 
கடல் படத்துக்குப் பிறகு மணிரத்னம் எந்த மொழியில் யாரை வைத்து படம் செய்வார் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்தியில் அவர் படம் இயக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் தெலுங்கில் நாகார்ஜுன், மகேஷ்பாபு ஆகியோரை வைத்து படம் செய்வதாக தகவல் வெளியானது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இதனை உறுதி செய்யாததால் இந்தத் தகவலையொட்டி வதந்திகள் பல பரவின.
 
இந்நிலையில் கேரளாவில் பேட்டியளித்த சுஹாசினி, நாகார்ஜுன், மகேஷ்பாபு இருவரும் படத்தில் நடிப்பதை உறுதி செய்தார். முதல்முறையாக நாகார்ஜுனும் மணிரத்னம் படத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.
 
மணிரத்னம் என்னிடம் நாற்பது நிமிடங்கள் கதை சொன்னார். அவ்வளவுதான்... நான் க்ளீன் போல்ட். படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். என்னுடன் மகேஷ்பாபுவும் நடிக்கிறார். நாங்கள் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை என்றார் நாகார்ஜுன்.
 
மணிரத்னம் இதற்கு முன் கீதாஞ்சலி என்ற தெலுங்குப் படத்தை இயக்கியிருக்கிறார் (தமிழில் இதய‌த்தை திருடாதே). அதிலும் நாகார்ஜுன்தான் ஹீரோ என்பது முக்கியமானது.